உசிலம்பட்டியில் பள்ளிகளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகமெங்கும் தைத்திருநாளையொட்டி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு தலைமையில் ஆசிரியைகள் பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.தலைமை ஆசிரியர் மதன் பிரபு தைத்திருநாள் கொண்டாடுவது குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

உசிலை மோகன்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!