சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா, நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், திமுக நகரச் செயலாளர் பெரி பாலமுருகன், நகராட்சி ஆணையாளர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

You must be logged in to post a comment.