ஸ்ரீவில்லிபுத்தூரில் காணாமல் போன ஊரணியை மீட்ட சார் ஆட்சியர்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் பஞ்சாயத்து ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சுமார் 84 சென்ட் ஊரணியானது காணாமல் போயுள்ளது. அந்த ஊரணியை பல வருடங்களாக அந்த பகுதியை சேர்ந்த தனிநபர்கள் பிளாட் போட்டு கற்கள் ஊன்றி ஆக்கிரமித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து சார் ஆட்சியர் தினேஷ் குமாருக்கு புகார் வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் விசாரணை செய்ததில் அது அரசுக்கு சொந்தமான ஊரணி நிலம் என தெரிந்த நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டி மீண்டும் அதை ஊரணியாக மாற்றும் முயற்சியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!