உசிலம்பட்டியில் அமுமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ உடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளருமான மகேந்திரன் அந்த கட்சியில் இருந்து விலகி தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டியில் அமுமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மகேந்திரன் அலுவலகத்தில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையிலான நிர்வாகிகள் எழுமலை, பேரையூர் உசிலம்பட்டி ஆகிய பகுதியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று மகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர் , அதனை தொடர்ந்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!