தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – மறந்துடாதீங்க…

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை ஏப்ரல் 2 முதல் தவணையாகவும், இரண்டாம் தவணை ஏப்ரல் 30 அன்றும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை மறக்காமல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!