இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காவலர் குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் மூன்று மாதங்களாக தேடப்பட்டுவந்த தனிப்பிரிவு தலைமை காவலர் சரவணனை இன்று உச்சிப்புளி போலிசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணனை பத்திரிகையாளர்கள் பார்வையில் இருந்து மறைத்து மிக ரகசியமாக இராமேஸ்வரம்
நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் வீட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தனி பிரிவு காவலர் சரவணனை வரும் 28ந் தேதி வரை பத்து நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சரவணனை இராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









