ராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் காணிப்பாளராக சந்தீஷ் ஐபிஎஸ் பதவியேற்பு… வீடியோ..

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கோவை மாநகர காவல் துணை ஆணையராக பணிபுரிந்த சந்தீஷ் ஐபிஎஸ் ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் பத்திரிகையாளர்களிடம் :- .ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பு ஏற்றத்தை நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு நன்றி கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கம் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தி பரிமாற்றம் செய்து விற்பனை செய்பவர்கள் மீதும் , அவ்வப்போது நடைபெறக்கூடிய ஜாதி கலவரங்கள் செய்பவர்கள் மீதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடக்கக்கூடிய குற்றங்களை செய்பவர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ராமநாதபுரத்தில் நடக்கக்கூடிய இரண்டு முக்கிய குருபூஜையினால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுத்து அமைதி வழியில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!