கீழக்கரையில் வெளி மாநிலத்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு ..

கீழக்கரையில் கட்டிட வேலை, கூலி வேலை, பொருள் விற்பனை என பல்வேறான வேலைகளுக்கு வட மாநிலத்தவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களால் பல குற்றச் செயல்கள் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில்  கீழக்கரை வெங்கடேஷ்வரா மஹாலுக்கு 08/09/2018  மாலை 05.00 மணிக்கு காவல்துறையினரால் வடமாநில பணியாளர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. கீழக்கரை காவல் ஆய்வாளர் திருமதி முத்து மீனாட்சி தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் செந்தில் முருகன், முனீஸ்வரன், மற்றும் காவலர் சந்திர சேகர் ஆகியோர்  வடநாட்டவர்களிடம் 2 போட்டோ, ஆதார் நகல் மனுவில் கையெப்பம், போன்றவற்றை பெற்று கொண்டனர். மேலும் அவர்களிடம் வேலைக்கு வைத்திருப்பவர்களின் அனுமதியின்றி எங்கும் எங்கும் சொல்லக்கூடாது  என்ற நிபந்தனையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

தகவல்: மக்கள் டீம்

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!