அண்ணாநகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து காவலர்களுடன் வாகனதணிக்கை செய்தபோது ஆட்டோவில் வந்த ஏழு நபர்கள் ஆயுதங்களுடன் வந்ததால் ஆட்டோவை நிறுத்த முயற்சித்தபோது காவலர்களை ஏழு நபர்களும் சேர்ந்து தாக்க முயற்சித்தும் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டை வீசிவிட்டு லெட்சுமணன், ஆனந்த் என்ற ஆனந்தகுமார், சூர்யா, ஜெயசூர்யா பிரகாஸ், திருமலை, பாஸ்கர், செந்தில் குமார் ஆகிய ஏழு நபர்களும் தப்பிச்சென்றனர்.
இந்நிலையில் வழக்குபதிவு செய்த போலிசாா் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ஜெயபால் பர்னபாஸ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்தனா். தனிப்படையினரின் சிறப்பான பணியை பாராட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.