மதுரை – காவல் ஆணையரிடம் பொதுமக்கள் இரகசிய தகவல்களை தெரிவிக்க புதிய கைபேசி எண் அறிமுகம்..

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் பொதுமக்களின் நலன் கருதியும், மதுரை மாநகரை குற்றமில்லா மாநகராக மாற்றுவதற்காகவும் ஒரு புது முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய கைபேசி எண்ணை (98438-79999) அறிமுகம் செய்துள்ளார்.இந்த கைபேசி எண் வாட்ஸ்ஆப் மூலமாக திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, அந்நிய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் இரகசிய தகவல்களை காவல் ஆணையர் அவர்களுக்கு குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ மற்றும் ஆடியோக்கள் மூலமாக அனுப்பலாம்.

* பொதுமக்கள் அனைவரும் குற்றங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றிய முக்கிய விபரங்களை எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி தெரிவிக்கலாம்.

* போக்குவரத்து தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை இந்த எண்ணிற்கு அனுப்புவதை தவிர்க்கவும்.

* பொதுமக்கள் கொடுக்கும் அனைத்து தகவல்கள் மற்றும் தகவல் கொடுப்பவர்களின் விபரங்கள் காவல் ஆணையர் அவர்களுக்கு மட்டுமே நேரடியாக சென்றடைவதால பொதுமக்கள் யாரும் அச்சப்பட தைவையில்லை இரகசியம் காக்கப்படும்.செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!