பட்டிவீரன்பட்டியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை, ரூ.1,05,000 அபராதம்..
திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த அய்யம்பாளையத்தை சேர்ந்த பால்ராஜ்(21) என்பவரை பட்டிவீரன்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள் பால்ராஜ்க்கு ஆயுள் தண்டையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,05,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
You must be logged in to post a comment.