வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: ராமதாஸ் வலியுறுத்தல்..

வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: ராமதாஸ் வலியுறுத்தல்..

அரசியல்வாதிகள் நிறைய படித்திருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முடிவெடுக்க முடியும். மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதிகாரிகளை தன்னுடன் வைத்திருக்கலாம். ஆனால், அதிகாரிகள் சொல்வதையெல்லாம் அரசியல்வாதிகள் செய்யக்கூடாது.

மக்களின் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால், சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள் என்னை அடைத்துவிட்டார்கள். நல்ல கல்வி, சுகாதாரம், விவசாயம் இவைதான் நமக்குத் தேவை.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை கொண்டு வருவதைப்போல, வாக்குக்கு காசு கொடுக்கக் கூடாது என்ற சட்டத்தையும் கொண்டு வர வேண்டும். வாக்குக்கு பணம் கொடுப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும். நான் எப்போதும் மக்களுக்காகப் போராடிக் கொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!