திண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..

திண்டுக்கல்லில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை தடுக்க திண்டுக்கல் மாநகராட்சியில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இக்குழுவினர் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள இரண்டு கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடையின் மொட்டை மாடியில் பதுக்கி வைத்திருந்தனர். அந்த இரண்டு கடைகளிலும் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தலா 5000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் திண்டுக்கல் பூ மார்க்கெட் பகுதியில் ஒரு கடையில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து அந்த கடைக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!