கீழக்கரையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்  ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரை வனச்சரகத்தின் சார்பாக கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார்  முன்னிலையில் கீழக்கரையில் சிவகாமி புறத்தின் அருகில் இருக்கக்கூடிய குனியம்மன் கோவில் பொதுமக்கள் பயன்படும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!