சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்ற மாபெரும் கண் மற்றும் பொது சிகிச்சை மருத்துவ முகாம்..

வட சென்னை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 72-வது சுதந்திர தினம் மற்றும் தியாகப்பெருநாளை முன்னிட்டு மாபெரும் கண் மற்றும் பொது சிகிச்சை மருத்துவ முகாம் இன்று (26.08.2018) தாங்கல், பி.பி .டி ரோட்டில் அமைந்துள்ள அல் ஃபலாஹ் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஜாக் அவர்கள் தலைமை தாங்கி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த மருத்துவ முகாமில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

தகவல் அபுபக்கர்சித்திக்

தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!