மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் முகாமில் மேட்டுப்பாளையத்தில் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மனுவாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடம் இருந்து மனுவாக பெறப்பட்டது
நகராட்சியில் நடைபெற்ற முகாமில் மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மேட்டுப்பாளையம் நகராட்சி சார்ந்த ஊட்டி சாலை இணைக்கும் பவானி ஆற்று பாலத்தை சீரமைக்க கோரியும்
ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும்
அரசு மருத்துவமனை உள்கட்ட அமைப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளையும் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை விரிவாக்கம் செய்யவும் மேட்டுப்பாளையம் காவல் நிலைய காவலர்கள் அதிகப்படுத்தி கோரியும்
நகராட்சி தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த கோரியும் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகாமையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகளை இடம் மாற்றக் கோரியும் முன்னதாக பட்டா வழங்கியவர்களுக்கு இடம் அளவிட்டு தரக்கூடிய கோரிக்கை மனுக்களை மேட்டுப்பாளையம் சிஐடி பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இன்று மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுக்களாக கொடுத்தனர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சித் தலைவர் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே
கோயம்புத்தூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கே. கார்த்திகேயன்,
கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், தனித்துறை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் தாலுக்கா வருவாய் வட்டாட்சியர் ராமராஜ்,
தலைமை இடத்து துணை வட்டாட்சியர் செல்வராஜ், துணை வட்டாட்சியர் சங்கர்லால், வருவாய் ஆய்வாளர் கற்பகம்
கோவை மாவட்டம் இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மருத்துவ சுமதி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமணன்,
நகராட்சி ஆணையர் அமுதா, நகராட்சி பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் மனோகரன் மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு, நகர மன்ற உறுப்பினர்கள் வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்


You must be logged in to post a comment.