பெரியபட்டினம் செய்யது அலி தர்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா..வீடியோ செய்தி..

இராமநாதபுரம் அருகே பெரியட்டினத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா அதிவிமர்சையாக நடைபெற்றது.

பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா 117 ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று (28.8.18) மாலை வான வேடிக்கை வானில் வர்ண ஜாலம் காட்ட, பேன்ட் வாத்தியங்கள் முழங்க இனிதே துவங்கியது. வண்ண மின் விளக்குகளாலும், மல்லிகை பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை ஏராளமானோர் தோள்களில் சுமந்து நாட்டிய குதிரைகள் முன் செல்ல மேளதாள கரகாட்ட கலைஞர்களின் நடனத்துடன், ஊர்வலமாக தர்ஹாவை மூன்று முறை வலம் வந்து மகான் செய்ய .தலி ஒலியுல்லாஹ் அடங்கப்பட்ட நினைவிடத்தில் சந்தனம் பூசப்பட்டது.

பல்லாயிரக்கணக்கானோர் இவ்விழாவில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா நிர்வாகிகள், சுல்தானியா சங்க நிர்வாகிகள் செய்தனர். 07. 9.2018 (வெள்ளி) கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது

செய்தி:- முருகன், இராமநாதபுரம் . கீழை நியூஸ்

—————————————

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!