கார்கில் விஜய் திவாஸ் மாணவர்கள், வீரர்கள் பேரணி

கார்கில் போர் வெற்றியை நினைவுகூறும் “கார்கில் விஜய் திவாஸ்” தினம் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. 20 ஆம் ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை சார்பில் கார்கில் விஜய் திவாஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது

. இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள், கேந்திரிய வித்யாலயா , குஞ் சார்வலசை ராஜா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மண்டபம் ரயில் நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றோரை, இந்திய கடலோரக் காவல் படை (மண்டபம் ) கமாண்டிங் அதிகாரி எம்.வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!