கீழக்கரை பேர்ல் (Pearl) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..

கீழக்கரை  பேர்ல் (Pearl) மெட்ரிகுலேஷன்  மேல்நிலைப் பள்ளியின்   74 வது  சுதந்திரதின விழா  சிறப்பாக நடைபெற்றது. கீழக்கரை  காவல் நிலைய ஆய்வாளர் தங்கையா கிருஷ்ணன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி.ந வைத்து  சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் ஷரீபா அஜீஸ், முதல்வர் சாகிரா பானு , சீதக்காதி  அறக்கட்டளை துணை  பொது மேலாளர் ஷேக் தாவுத் கான் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர. பள்ளி வரலாற்றில் முதன்முறையாக மாணவர்களின்றி சுதந்திர தின விழா நடைபெற்றது குறிப்பிடதக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!