சீர்காழி அருகே கருமேகம் சூழ்ந்ததால் தோகை விரித்தாடிய மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதிகளில் அதிக அளவில் மயில்கள் வாழ்கின்றன. அவ்வபோது இறை தேடி கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வயல்களுக்கு வந்து நெற்பயிர்களை சாப்பிட்டு செல்வது வழக்கம். அப்போது திடீரென மழை வருவது போல கருமேகங்கள் சூழ்ந்தது. அங்கு இறை தேடி வந்த மயில் ஒன்று திடீரென தோகை விரித்து ஆடத் தொடங்கியது. மழை வருவதற்கான மேகங்கள் சூழ்ந்ததால் ஆனந்தத்தில் தோகை விரித்து மயில் ஆடியது அப்பகுதி மக்களிடையே ஆனந்தத்தை ஏற்படுத்தியது.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!