*மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது*
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா அவர்களின் மேற்பார்வையில்
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி சம்பந்தமாகவும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தும் போக்சோ சட்டம் சம்பந்தமாகவும் பள்ளி மாணவிகள் பாதுகாப்பாக பள்ளி படிப்பை கற்பதற்காக தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலி சம்பந்தமாகவும் 1098.14417 காவல்துறையில் உதவியை பெறுவது சம்பந்தமாகவும் குறும்படம் ஒலிபரப்பி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகளுக்கு மேல் கல்வி கற்பதற்கு வேண்டிய உதவிகள் செய்வது சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது
இந்தக் கூட்டத்தில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ் பாஷா உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த் குமார் ஆசிரியர்கள் லதா லீலா மகேஸ்வரி ஜாஸ்மின் உள்ளிட்டோரம் பெற்றோர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இறுதியில் ஒருங்கிணைப்பாளர் உமா நன்றி கூறினார்
You must be logged in to post a comment.