பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு பேரணி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்பு பேரணி நடத்தினர் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பஸ்நிலையம் எம்.ஜி.ரோடு ஸ்தூபிமைதானம் காவல்நிலையம் வரை மழைநீர் சேமிப்பு குளம் குட்டைகளை பாதுகாத்தல் ஏரிகளை பராமரித்தல் வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்தல்

உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்முன்னதாக பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி  கொடியசைத்து துவக்கி வைத்தார் கல்லூரி முதல்வர் செண்பகராஜா தலைமை வகித்தார் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கினைப்பாளர்கள் ஆரிமுத்து செல்வராஜ் ஆகியார் முன்னிலை வகித்து மாணவர்களை வழி நடத்தி சென்றனர் கல்லூரி துனை முதல்வர் ரவி நன்றி தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!