தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி தாண்ட உடையார் பகுதியை சேர்ந்தவர் கன்னன் என்பவரின் மகன் வெங்கடேசன் (37)இவர் மாரண்டஅள்ளியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் நிர்வாகியாக உள்ளார் சுமார் 10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. இவருக்கும் இவரின் தாய் மாமன் தர்மபுரி மாவட்டம் ஒட்டப்ட்டி பகுதியை சேர்ந்த துரைராஜ் (75)அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் ஆகியோருக்கும் சொத்து விவகாரத்தில் பிரச்சினை இருந்து வந்தது இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் நீதிமன்றம் வெங்கடேசனுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் துரைராஜ் வெங்கடேசனை கொலை செய்துவிட்டால் 10 கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றி விடலாம் என எண்ணி கூலிப்படை ஏவி கடந்த மாதம் 19ம் தேதி இரவு மாரண்டஹள்ளி வெள்ளிச்சந்தை சாலையில் வெங்கடேசன் மோட்டார் சைக்கிள்ளில் வரும் போது இரவு நேரத்தில் 6 பேர் சேர்ந்த கும்பல் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர் இரத்த வெள்ளத்தில் இருந்த வெங்கடேசனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்சி இது தொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இவ்வழக்கில் துரைராஜ் அவரது மகன் கணேமூர்த்தி (33) மேலும் மாரண்டஅள்ளி காந்தி நகரை சேர்ந்த நகரை கெளரவன் மகன் காந்தி (21), காளியப்பன் மகள்பெரியண்ணன் (20) சம்பத் மகன் சந்துரு , முருகன் மகன்வெற்றிவேல் (21), உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் இவர்கள் கொலைக்கு பயன்படுத்திய பயங்கர அரிவாளை மாரன்டஅள்ளி காவல் துறையினர் கைப்பற்றினர்.


You must be logged in to post a comment.