அண்ணா 111வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  ஒன்றிய அஇஅதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பாலக்கோடு  பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாவின் உருவ படத்திற்க்கு பாலக்கோடு ஒன்றிய செயலாளர் கோபால் மற்றும் நகர செயலாளர் சங்கர் மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு  இனிப்புக்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தொமு நாகராசன் பாலக்கோடு ஒன்றிய அவைத்தலைவர் சின்னபையன் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் முன்னாள் நகர செயலாளர் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் செந்தில்குமார் வீரமணி சுப்ரமணி மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு அண்ணாவின் உருவ  படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!