பழநியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பள்ளி ஆசிரியையின் கழுத்தை அறுத்து தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பழநியைச் சேர்ந்த பகவதி மகள் பவித்ரா,23, தனியார் பள்ளி ஆசிரியை. இவர் நேற்று மாலை ஒரு வாலிபருடன் ஆர்.எப்.ரோட்டில் ஆட்டோவில் ஏறி பழநி அடிவாரத்திற்கு வந்தார். பூங்காரோடு ஆவின் அருகே அந்த வாலிபர், பவித்ராவின் கழுத்தில் பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
பவித்ராவைமேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. பழநி அடிவாரம் போலீசார், இதை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










