பழநி அருகே அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்த கந்தூரி விழா..!

 

திண்டுக்கல் மாவட்டம்
பழனி அடுத்த பாலசமுத்திரத்தில் சுன்னத் வல்ஜமாத் பள்ளிவாசல் சார்பில் கந்தூரி விழா விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக தர்காவில் உலக நலன் வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாத் தலைவர் அலாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!