பிரசித்திப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (16/01/2019) தொடங்கியது…ஒருவர் காயம்..

பிரசித்திப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இப்போட்டியில் 988 காளைகளும், 846 வீரர்களும் பங்கேற்பு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 9பேருக்கு அனுமதி மறுப்பு; 9 வீரர்களும் மருத்துவ சோதனையில் தேர்வாகததாதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

ஒருவர் படுகாயம்:-

பாலமேடு ஜல்லிக்கட்டில் படு காயமடைந்த பாலமேடு சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் வயது 52 ஆண்குறியில் மாடு குத்தியதில் படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 108 வாகனம் மூலமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!