பாப்பாரப்பட்டி அடுத்த பெரியூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பெரியூர் கிராமத்தில் 1500க்கு மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு நாட்களாக  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் சரியாக வரவில்லை என்றும் மற்றும் பொங்கல் பண்டிகை  குடிநீர் வராததால் பெரியூர் கிராம மக்கள் பேருந்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்பு ஊராட்சி தலைவர் விநாயகம்  சம்பவ இடத்திற்கு வந்து டிராக்டர் மூலம் குடிநீர் விடப்படும் என்று உறுதி அளித்த பின்பு மறியலை கைவிட்டனர். இதனால் ஒரு மணி நேரம் பேருந்து நிறுத்தப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!