பாலக்கோட்டில் வட்டார வனமையம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் தினவிழா

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வட்டார வனமையம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் தினவிழா ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி (உருது)  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் ஜார்ஜ் அண்ணாதுரை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுகுணா ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை பெற்றோர் பராமரித்தல் குறித்து விளக்கி பேசினார். விழாவில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் நடனப்போட்டிகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு, இனிப்பு, மற்றும் பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் ஆசிரியர்கள் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் விமலா நன்றி தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!