மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு..

மதுரை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். மதுரையில் இன்று (22/02/2019) நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார்.

இராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் 1 மணியளவில் வந்தார். உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அமித்ஷா வருவதை அறிந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்து சந்தித்து பேசினார்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கும் தொகுதிகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

கீழை நியூஸுக்காக.. மதுரை நிருபர் கனகராஜ்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!