பசும்பொன்னில் தேவர் நினைவிடம் முன் மேற்கூரை திறப்பு..

இராமநாதபுரம், அக்.29- இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியையொட்டி பரமக்குடி, கமுதி வட்டங்களில் மேற்கொண்டுள் திட்டப்பணிகளை பார்வையிடுதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல்ஏ, முருகேசன் எம் எல் ஏ முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.35.24 கோடி மதிப்பில் பார்த்திபனூர் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கமுதி புறவழிச்சாலை பணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். 

பசும்பொன், அபிராமம் பகுதிகளில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி தல ரூ.8 லட்சம் மதிப்பிலான பயணிகள் நிழற்குடை, தேவர் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் சென்று வரும் வழியில் ரூ.5.73லட்சம் மதிப்பில் நிரந்தர மேற்கூரையை அமைச்சர் திறந்து வைத்தார். பசும்பொன்னில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை பணியை பார்வையிட்டார்.  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரெத்தினசாமி, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜா, கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாசுதேவன், கமுதி வட்டாட்சியர் சேதுராமன், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!