கீழக்கரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்..

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் சூழலில் வைரஸை கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை  இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை நாம்தமிழர் கட்சி சார்பாக முஸ்லிம் பஜார், வள்ளல் சீதக்காதி சாலை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், முன்களபணியாளர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் நகர்செயலாளர் வாசிம் அக்ரம், நகர் தலைவர் மன்சூர்தீன், பொருளாளர் சாகுல், இணைச்செயலாளர் ஆதில், இளைஞர் பாசறை அஹமது ஆகியோர் கபசுர குடிநீரை விநியோகம் செய்தனர்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!