கடம்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேவையுடையோருக்கு பொருளுதவி…

இன்று 07-06-2020 இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் சிறுவயல் ஊராட்சிக்குட்பட்ட கடம்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கடம்பூர் கிளை உறுப்பினர்களின் சார்பாக கொரோனா தொற்று பரவுதலின் காரணமாக அன்றாட வாழ்வில் பாதிப்படைந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு- நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பரமக்குடி தொகுதி, நயினார்கோவில் ஒன்றியம், மற்றும் பல  ஊராட்சிகளிருந்தும் வருகை புரிந்து உதவிகள் செய்தனர்.  அதே போல்  இந்த சேவைக்கு நிதி உதவிகள் செய்திட்ட நாம் தமிழர் கட்சியின் கடம்பூர் கிளை உறுப்பினர்களுக்கும் ஒத்துழைப்பு தந்திட்ட கடம்பூர் கிராம பெரியோர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சியின் கடம்பூர் கிளை சார்பாக நன்றியும், புரட்சிகர வாழ்த்துக்களும் தெரவிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!