கும்பரம் ஊராட்சியில் என் எஸ் எஸ் முகாம்…

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கும்பரம் ஊராட்சியில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

23.9.2018 இல் தொடங்கிய முகாமிற்கு தலைமை ஆசிரியர் யுனைசி வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலை வகித்தார். கும்பரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் ரவி வாழ்த்துரை வழங்கினார். கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கும்பரம் ஊராட்சி பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனார். கோயில்களில் உழவாரப் பணி மேற்கொண்டனர். கிராம மக்களுக்கு யோகா பயிற்றுநர்கள் கிருஷ்ணன், பொன்னாண்டி ஆகியோர் பயிற்றுவித்தனர். கிராமத்தில் அனைவரிடமும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டின் தீங்கு குறித்து விளக்கும் விதமாக மக்களுடன் மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி சென்றனர். மண்டபம், திருப்புல்லாணி வட்டார கண் மருத்துவ உதவியாளர்கள் டேனியல் ஜோசப், வாசுதேவன் ஆகியோர் தலைமையில் கண் பரிசோனை முகாம் நடைபெற்றது.

அம்முகாமில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஆசிரியர் சரவணன் பேசினார். ஆசிரியர் கண்ணன் சுப்பையா உணவு பாதுகாப்பு குறித்து ஆசிரியர் கண்ணன் சுப்பையா பேசினார். ஏழு நாள் முகாம் நிறைவு நாளில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரகுமத்துல்லா நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!