நிலக்கோட்டை ஒன்றியத்தில் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்களுக்கு தெரிவிக்க கோரி கோரி பாரதிய ஜனதாவினர் மனு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் முத்தையா தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர்..

அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நிலக்கோட்டை ஒன்றியத்தில் நடக்கும் கிராம சபைகள் குறித்து கிராம மக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என கூறியும், வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற கிராமசபை கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிராமசபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து மனுவை கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் உடனடியாக இந்த தண்டோரா மூலமாக இருக்கின்ற கிராம சபை கூட்டத்தை வைக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர்  குமார், ஒன்றிய நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம. ராஜா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!