கோயிலை இடித்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி ஊர் பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே என். கோவில்பட்டி என்ற கிராமம் உள்ளது. கிராமத்திற்கு பொதுவான கோவில் உள்ளது இந்தக் கோவிலை சில மர்ம நபர்கள் இடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். விடுத்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி நிலக்கோட்டை காவல் நிலையம் முன்பு ஊர் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பின்பு சிறிது நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதை அறிந்த வட்டாட்சியர் தனுஷ்கோடி மற்றும் நிலக்கோட்டை ஆய்வாளர் குரு வெங்கடேஷ் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோவில் இடித்தவர்களை மிக விரைவில் கண்டுபிடித்து கைது செய்வதாக போராட்டக்காரர்களிடம் கூறியதை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!