நிலக்கோட்டையில் மாட்டு வண்டியில் மணல் திருடிய  2 பேர் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டி பகுதியில் உள்ள வைகை ஆற்றுப்படுகையில் மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி தாலுகா, நல்லுஓச்சான்பட்டியை நடேசன் வயது 50, அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்த வேல்முருகன் வயது 44 ஆகிய 2 பேர்களும் மாட்டுவண்டியில் அரசு அனுமதியின்றி மணலை தேடிக் கொண்டிருந்தனர். இதை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் மயில்ராஜ். போலீஸ் ஏட்டு ஜெகதீஷ். பாலசந்தர்.போலீசார் பிடித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!