கொடைரோட்டில் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி ரயில் நிலையத்தில் கடும் சோதனை

மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப்பணி தொடக்க விழா உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக இன்று காலை தமிழகம் வர இருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திண்டுக்கல் இரயில் நிலையம் மற்றும் கொடைக்கானல்ரோடு ரயில் நிலையங்களில் காவல்துறையினர் இரவு பகலாக தீவிர பரிசோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வார இருதி விடுமுறைநாட்களில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இரயில் மூலம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரக்கூடிய கொடைக்கானல்ரோடு ரயில் நிலையத்தில் அனைத்து பயணிகளும் அவர்களின் உடமைகளும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது இந்த சோதனையை ஆய்வாளர் காவல் ஆய்வாளர் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலிசார் கொடைக்கானல்ரோடு ரயில் நிலைய காவல்துறையினர் 2-ஷிப்ட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!