நிலக்கோட்டையில் தி. மு. க. கூட்டணி கட்சியினர் மதுக்கடையை திறக்காதே எனகோரி ஆர்ப்பாட்டம்

நிலக்கோட்டையில் தி. மு. க கூட்டணி கட்சியினர் மதுக்கடையை திறக்காத என கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிலக்கோட்டை நகர செயலாளர் தி. மு. க கதிரேசன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் கோகுல்நாத், ம. தி. மு. க. ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர்கள் முன்னிலை வகித்தார். நகர துணை அமைப்பாளர்கள் முருகேசன், ஜோசப் உள்பட பலர் இருந்தனர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்களை காப்பாற்றும் வேலையைச் செய்யாமல் தற்போது மது கடையைத் திறந்து பொது மக்களை காப்பாற்றும் நோக்கமல்ல. திறக்காதே மதுக்கடையை திறக்காதே என நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு சமூக இடைவெளியோடு திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நிலக்கோட்டை நிருபர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!