கீழக்கரை முகைதீனியா பள்ளியில் நிலவேம்பு கசாயம் விநியோகம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவில் அமைந்துள்ள முகைதீனியா மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு பள்ளியின் தாளாளர் மௌலா முகைதீன், துணை தலைவர் எம்.எம்.எஸ் முகைதீன் இபுராஹிம், பொருளாளர் சேகு பசீர் அகமது மற்றும் முதல்வர் சேகு சஹ்பான் பாதுசா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த நிலவேம்பு கசாயம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வழங்க இருப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தொிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை புதுத்தெரு MYFA சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடதக்கது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!