நிலக்கோட்டையில் மறைந்த விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்..

நிலக்கோட்டையில் மறைந்த விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாடகமேடை அருகே தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தேமுதிகவின் நிலக்கோட்டை (தெற்கு) ஒன்றிய செயலாளர் எம். வெள்ளைச்சாமி தலைமையில் விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்,அதன் பிறகு நினைவேந்தல் கூட்டமும் நடைப்பெற்றது.

இந்த மலரஞ்சலி நினைவேந்தல் கூட்டத்திற்கு தேமுதிகவின் மாவட்ட, ஒன்றிய, மற்றும் கேப்டன் மன்ற நிர்வாகிகள். திமுக, அதிமுக, காங்கிரஸ்,விசிக,பாமக, மதிமுக,பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அமமுக,திக, புதிய தமிழகம்,நாதக,தமுமுக,மமக, எஸ்டிபிஐ, மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பொருப்பாளர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜயகாந்த் எப்பேர்பட்ட வள்ளல் என்பதை அனைத்து கட்சியினரும் நினைவு கூர்ந்தனர். மேலும் நிலக்கோட்டை வணிகர் சங்கத்தினர்,பூ வியாபாரிகள் மற்றும் கேப்டனின் அபிமானிகள் என ஏராளமானோர் திரண்டு வந்து விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!