SDPI கட்சியின் திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட தேவிப்பட்டினம் நகரில், தொகுதியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருவாடானை தொகுதியின் தலைவர் அபுல் கலாம் ஆசாத் தலைமை வகித்தார் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லாஹ் முன்னிலை வகித்தார்.தொகுதியின் உடைய செயலாளர் முஹம்மது ஹனீப் வரவேற்புரை ஆற்றினார்.இக்கூட்டத்தில் தொகுதியின் உடைய இணைச் செயலாளர்கள் முஹம்மது ரிஸ்வான் மற்றும் ஹாஜி அலி அவர்களும், தொகுதி பொருளாளர் அப்துல்லா ,செயற்குழு உறுப்பினர் அலாவுதீன் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும்,ஆர்எஸ் மங்கலம் நகரில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என்றும், தேவிப்பட்டினம் நகர் நிர்வாகிகள் சீரமைப்பு பணி நடத்த வேண்டும் என்றும்,தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.இறுதியாக, தொகுதியின் தலைவர் அபுல் கலாம் ஆசாத் நன்றியுரை ஆற்றினார்
தேவிப்பட்டினம் நகரில், SDPI கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
எழுதியவர்: mohan October 5, 2020, 12:18 pm




You must be logged in to post a comment.