17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் முகக் கவசம் அணியாத வியாபாரிகள் பொதுமக்களுக்கு ரூ. 200 அபராதம்

மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் முகக் கவசம் அணியாத வியாபாரிகள் பொதுமக்களுக்கு ரூ. 200 அபராதம்

எழுதியவர்: mohan September 14, 2020, 9:49 am

ஞாயிற்றுக் கிழமை அனைத்து மாமிசக் கடை இறைச்சிக்கடை மீன்களை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது புரட்டாசி மாதம் நெருங்குவதால்காலை முதல் ஆகவே இறைச்சிக்கடை மாமிசம் கடை. மீன் கடை ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.ஊரடங்கு மெல்ல தளத்தை பட்டாலும் பொதுவாக மக்கள் அதிகம் கூட கூடிய இந்த ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்புகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வந்த வேளையில் தற்போது தளங்களுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமை இன்று என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் விதமாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் அவர்கள் உத்தரவுக்கிணங்க

20 பேர் கொண்ட குழு மதுரை அரசரடி பகுதியில் உள்ள கரிமேடு மீன் மார்க்கெட்டில் ஆய்வை மேற்கொண்டனர் இந்த ஆய்வின்போது முகக் கவசம் அணியாமல் மீன் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி இல்லாமல் மீன் விற்பனை செய்த வியாபாரிகள் உட்பட அனைவருக்கும் அபராதத் தொகையாக 200 விதிக்கப்பட்டது.இந்த திடீர் ஆய்வின்போது மாணவர் மதுரை மாநகராட்சியின் மண்டலம் ஒன்லின் உதவி ஆணையாளர் சேகர் மற்றும் மதுரை மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் ராமநாதன் உட்பட மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் தருபவர்களுக்கு ரூபாய் 200 விதிக்கப்படுவது மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டது இந்த குழுவின் மூலம் நேற்றைய தினம் வரை ரூபாய் ஒரு கோடியே 26 லட்சத்து 58 ஆயிரத்து 450 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது அதேபோன்று கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் செய்வதற்காக மா நகராட்சி .மற்றும் பேரூராட்சி மாநகர் காவல்துறை மாவட்ட காவல்துறை சிறப்பு பறக்கும் படை குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!