17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டுமென சொட்டாங்கல், கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடி நூதன முறையில் போராட்டம்

சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டுமென சொட்டாங்கல், கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடி நூதன முறையில் போராட்டம்

எழுதியவர்: mohan August 10, 2020, 7:18 pm

சீர் மரபினருக்கான இடஓதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும், சீர் மரபினருக்கு சாதி சான்றிதழ் வழங்க விரிவான ஏற்பாடுகளுடன் கூடிய தனிச்சட்டம் இயற்ற வேண்டும், சீர் மரபினர் சாதி சான்றிதழ் எல்லா மாநிலங்களாலும் ஒரே மதாரியாகவும், செல்லும்படியாகவும் வழங்க வேண்டும், ஒபிசியினருக்கு உயர் பதவி வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 27 சதவிகித சீர் மரபினர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், ரோகினி கமிஷன் பரித்துரைத்த திடடங்களை பழங்குடியினரான சீர் மரபினருக்கு செய்ய வேண்டும் எனக்கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் சொட்டாங்கல் விளையாடியும், கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!