18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காலணி அணியாமல் மனு அளித்த மாணவி… நெகிழவைத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

காலணி அணியாமல் மனு அளித்த மாணவி… நெகிழவைத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

எழுதியவர்: mohan July 29, 2020, 2:02 pm

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மாணவி செருப்பு அணியாமல் இருந்தார். இதனை கவனித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாணவிக்கு செருப்பு வாங்க 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து நெகிழவைத்தார்.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவசர கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் நேற்று தொலைபேசி மூலம் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. தொலைபேசி மூலம் பொது மக்கள் தொடர்பு கொண்டு தங்களது அவசர கோரிக்கைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!