மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் திங்கட்கிழமை அலுவலகம்
பூட்டப்பட்டது.செம்பனார்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் உதவி பொறியாளராக பணியாற்றும் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்கூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளும்போது கொரோனா தொற்று உறுதியானதால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா நோய் பரவாமல் இருப்பதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது.
இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.




You must be logged in to post a comment.