17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் 6 மணி முதல் 3 மணிவரை கடை திறக்க வேண்டும். வர்த்தகர்கள் உடன் நடந்த கூட்டத்தில் முடிவு

நிலக்கோட்டையில் 6 மணி முதல் 3 மணிவரை கடை திறக்க வேண்டும். வர்த்தகர்கள் உடன் நடந்த கூட்டத்தில் முடிவு

எழுதியவர்: mohan June 25, 2020, 10:42 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில்  தனியார் பள்ளியின் அருகிலேயே வசிக்கும் குடும்பத்தாருக்கு 7 பேருக்கு கொரானா தொற்று இருப்பதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் காரணத்தை தொடர்ந்து நிலக்கோட்டையில் கடைகளை அடைப்பது குறித்து வர்த்தகர் சங்கம் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வர்த்தகர்கள் சங்கம் சார்பாக தானாக முன்வந்து காலை 6 மணி முதல் 24.06.2020 முதல் 30. 6. 2020 முழு ஊரடங்கு நடத்தப்பட இருப்பதால் இருப்பதாகவும், மக்கள் வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்கத் தலைவர் பிரபாகரன், சங்க செயலாளர் ராஜேந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!