18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல்.

அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல்.

எழுதியவர்: mohan June 15, 2020, 11:23 am

. நாகமலை புதுக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட துவரிமான் பகுதியில் புவியியல் மற்றும் சுரங்க அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் .அப்பொழுது மேலக்காலை நோக்கி டிப்பர் லாரி அனுமதி இல்லாமலும் உரிமம் இல்லாமலும் 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து புவியியல் மற்றும் சுரங்க அதிகாரி பாண்டியராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கரடிப்பட்டி யை சேர்ந்த முருகேசன்  32 கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்களை சேர்ந்த லாரி உரிமையாளர் முருகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!