கீழக்கரை ஏர்வடியில் சந்தனக்கூடு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்ந விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா நேற்று (15-08-2017) கடந்த வருடங்கள் போல் இந்த வருடமும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பண்டைய காலத்தில் புதிதாக இஸ்லாம் மார்க்கத்தில் வந்தவர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக இஸ்லாம் மார்க்கத்தில் இதுபோன்ற காரியங்கள் புகுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் நாளடைவில் அந்த நோக்கம் மாறி, அனாச்சாரங்களும், இஸ்லாம் அனுமதிக்காத காரியங்களே அங்கு நடைபெறுவதாக மார்க்க அறிஞர்களின் வருத்தம் தோய்ந்த கருத்தாக உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தாத வரை சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது.




You must be logged in to post a comment.