18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடனை ஊரடங்கு காலத்திலூம் திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் நிதிநிறுவனங்கள்;மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள் ஆட்சியரிடம் மனு!

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடனை ஊரடங்கு காலத்திலூம் திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் நிதிநிறுவனங்கள்;மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள் ஆட்சியரிடம் மனு!

எழுதியவர்: Askar June 9, 2020, 9:56 am

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடனை ஊரடங்கு காலத்திலூம் திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் நிதிநிறுவனங்கள், கூடுதலாக 2 மாத கால அவகாசம் பெற்று தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடன் பெற்ற பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 60 நாள்களைக் கடந்துள்ள நிலையில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்ல அரசு சில தளர்வுகளை அளித்திருந்தாலும், ஏராளமானோர் வேலையின்றி தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் போன்ற பல்வேறு பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக்குழு முலம் பெண்கள் வாங்கிய கடன் தொகையை ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாத நிலையில் திருப்பித்தர வேண்டும் என தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாயபடுத்தி மன உளைச்சல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டு வருகிறது.

தொடர்ந்து கடனை திருப்பிச் செலுத்துமாறு தங்களை நெருக்கடிக்குள்ளாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த கூடுதலாக 2 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கண்ணனிடம் மகளீர் சுய உதவி குழுவினர் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!